வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கோவை மாநகராட்சி பொறியாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை

கடந்த 21 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தநிலையில், வழக்கை நேற்று (பிப்.29) விசாரித்த நீதிபதி மோகனரம்யா, குற்றம் சாட்டப்பட்ட சங்கர நாராயணனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


கோவை: கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றியவர் சங்கர நாராயணன். இவர் பணியாற்றிய காலத்தில், 1995, ஏப்., முதல் டிச., 2000 வரையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் அளிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கையில், சங்கர நாராயணன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில், 12.57 லட்சம் ரூபாய் சொத்து குவித்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக, 2002, மார்ச் 4ல், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர் மீது, கோவை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, கடந்த 21 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை நேற்று (பிப்.29) விசாரித்த நீதிபதி மோகனரம்யா, குற்றம் சாட்டப்பட்ட சங்கர நாராயணனுக்கு ஓராண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...