கோவை மாவட்டத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாளை காலை 7மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் சுமார் 31 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (மார்ச் 3) நடைபெறவுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், கோயில்கள், டோல்கேட், பொதுமக்கள் அதிகமாக கூடுகின்ற இடங்கள், விமான நிலையம், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என 1088 கிராமப்புற மையங்கள், 497 நகா்ப்புற மையங்கள் என மொத்தம் 1,585 மையங்கள் மற்றும் நடமாடும் குழுக்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து நாளை (மார்ச் 3) வழங்கப்படவுள்ளது.

பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாளை காலை 7மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் சுமார் 31 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

இம்முகாம்களுக்குத் தேவையான சொட்டு மருந்து அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தயார் நிலையில் உள்ளது. இப்பணியில் சுகாதாரத் துறையினா், அங்கன்வாடிப் பணியாளா்கள், பல்வேறு துறைகளைச் சார்ந்த பணியாளா்கள், ரோட்டரி சங்கத்தினா், தன்னார்வலா்கள் ஈடுபடவுள்ளனா். அரசால் வழங்கப்படும் இந்த போலியோ சொட்டு மருந்து தரமானது, பாதுகாப்பானது மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகாரம் பெற்றதாகும்.

எனவே, பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து அளித்திருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் போலியோ சொட்டு மருந்து அளித்து தங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...