தாராபுரம் நகர திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 71 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவைமுன்னிட்டு பொதுமக்களுக்கு அமைச்சர் கயல்விழி வேம்பு, சந்தனம், செம்மரம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர திமுக இளைஞர் அணி சார்பில் நகர செயலாளர் முருகானந்தம் தலைமையில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்த நாள் விழாவை நகர திமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.



இந்த நிலையில் அண்ணா சிலை அருகே திமுக கட்சி சின்னம் பதிக்கப்பட்ட 71 கிலோ கேக் வெட்டி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பொதுமக்களுக்கு கொடுத்து பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்.



இதன் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு அமைச்சர் கயல்விழி வேம்பு, சந்தனம், செம்மரம், உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.



இதனைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் டீ சர்ட் ஆகியவற்றை வழங்கி வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.



இதற்கு முன்னதாக அண்ணா சிலை முன்பு 70 அடி திமுக கொடிக்கம்பத்தில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியின் அவைத்தலைவர் கதிரவன், நகரத் துணைச் செயலாளர் தவச்செல்வன் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் செல்வராஜ், அரசு வழக்கறிஞர் உதயச்சந்திரன்,தாராபுரம் நகர்மன்ற உறுப்பினர்கள் அபிராமி கார்த்தி, ஹைடெக் அன்பழகன், சாஜிதா பானு, ராஜேந்திரன், முத்துலட்சுமி, பிலோமினா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...