ஓய்வு பெறும் கடைசி நாளில் காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம்

சுமார் 4 ஆயிரத்து 217 சிமெண்ட் மூட்டைகள் விநியோகத்தில் முறைகேடு செய்யப்பட்டதை அடுத்து அலுவலர் ஹரிஹரன் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மீது தற்போது வரை மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு நடத்து வருகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்தவர் ஹரிஹரன் வயது 60. இவர் காங்கேயத்திற்கு பணிக்கு வருவதற்கு முன்னர் குண்டடம் யூனியனில் கடந்த 2022-2023ஆம் ஆண்டு பணிபுரிந்து வந்துள்ளார்.

அப்பொழுது தாராபுரம் தாலுக்கா, குண்டடம் யூனியனின் அம்மா சிமெண்ட் விநியோகத் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்துள்ள புகாரின் பேரில் கடந்த 2023 மாவட்ட ஆட்சியர் அலுவலக தணிக்கை பிரிவு உதவி இயக்குனர் மேற்கொண்ட ஆய்வில் ஹரிஹரன் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

சுமார் 4 ஆயிரத்து 217 சிமெண்ட் மூட்டைகள் விநியோகத்தில் முறைகேடு செய்யப்பட்டதை அடுத்து அலுவலர் ஹரிஹரன் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் மீது தற்போது வரை மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு நடத்து வருகிறது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிஹரன் ஓய்வு பெற இருந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் அவரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது போன்று காங்கேயத்திலும் சிவன்மலை, வீரணம்பாளையம் போன்ற பல்வேறு இடங்களில் தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் வழங்குவதிலும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது குற்றச்சாட்டாக எழுந்து வருகிறது. மேலும் அமைச்சர்கள் மட்டும் சிக்குகின்றனர் என்று பார்த்தால் காங்கேயம் வட்டார வளர்ச்சி அதிகாரியும் ஒய்வு பெரும் நாளில் சஸ்பெண்ட் ஆனது வேடிக்கையாக இருக்கிறது.

அலுவலக மீட்டிங், கிராமசபை கூட்டங்களில் இதே பிடிஓ பேசும் போது அரசு ஊழியர்கள் என்ற மமதையில் இவருக்கு கீழே உள்ள அதிகாரிகளை இவர் வசைபாடிய வீடியோக்கள் கடந்த ஆண்டு சமூகவலைத்தளங்களில் பரவி வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...