போக்குவரத்துக்கு பூங்காவில் பள்ளிக் குழந்தைகளுக்கு சைக்கிள் ஓட்டும் பயிற்சியினை கோவை மாநகர காவல்துறை ஆணையர் துவக்கி வைத்தார்


கோவை பி ஆர் எஸ் மைதானத்தில் உள்ள போக்குவரத்துக்கு பூங்காவில் (ட்ராபிக் பார்க்) இன்று இரண்டு தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சாலைவிதிகள் கடைபிடிப்பது, முறையாக சைக்கிள் ஓடுவது ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதனை கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் துவக்கி வைத்தார்.



இதனைத்தொடர்ந்து பள்ளிக் குழந்தைகள் மத்தியில் அமல்ராஜ் பேசுகையில், விபத்து என்பது அனைவருக்கும் நடக்கக் கூடியதே ஆகும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விபத்து எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், அந்த விபத்துக்கு முன்பு நாம் சாலைவிதிகளை கடைபிடித்தோமா என்பதுதான் கேள்வி?. சாலை விதிகளை அடுத்தவர் பாதுகாப்பிற்கு மட்டுமின்றி நம் பாதுகாப்பிற்காகவே கடைபிடிக்க வேண்டும்.



கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சாலைவிபத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் சாலைவிதிகளை மீறியவர்கள் ஆகும்.



இன்று குழந்தைகளாக உள்ள நீங்களே நாளை சாலையில் வாகனத்தை இயக்கப்போகிறீர்கள். அதற்காக இன்று முதலே சாலைவிதிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்' என்றார்.



இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவை மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன், உதவி ஆணையர் கொடி செல்வன் (கிழக்கு), ஆய்வாளர் ஐயர்சாமி (கிழக்கு) ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் நிறைவாக சிறப்பான முறையில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிய குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...