புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடை மக்கள் போராட்டத்தால் தற்காலிகமாக மூடப்பட்டது

கோவையை அடுத்த அன்னூர் ஒன்றியத்துக்குட்பட்ட  செங்காளிபாளையம் பகுதியில் நேற்று திடீரென டாஸ்மாக் கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த அன்னூர் காவல் துறையினர்  சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் கடையை அப்பகுதியிலிருந்து அகற்றும் வரை தங்களது போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்ததால் சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட  டாஸ்மாக் மேலாளர் பிரபாகரன் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதுடன், அப்பகுதியிலிருந்து கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் கடையை தற்காலிகமாக மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பொதுமக்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...