தாராபுரம் அருகே தேர்பாதை பகுதியில் உள்ள மதுபான கடை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

தேர்பாதை என்ற இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு உத்தரவு வந்த பின்பும் மதுபான கடையை அகற்றாமல் காலம் தாழ்த்தி வருவது வருத்தம் அளிப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தேர்பாதை என்ற இடத்தில் உள்ள மதுபான கடை 38 30 இந்த கடை கடந்த பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது.



தேர் பாதை தொகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுபான கடை போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக இந்த பகுதிக்கு வருகை புரிந்த போது பொதுமக்கள் அமைச்சரை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் இந்த மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றி தருகிறேன் என உத்தரவளித்ததின் பேரில் அப்போது பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேர் பாதையில் உள்ள 3830 என்ற மதுபான கடை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவின் அடிப்படையில் இந்த கடை மோளரபட்டி என்ற கிராமத்தில் அமைவதற்கு தற்போது ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து மோளரபட்டி கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் நேற்று இரவு எங்களது பகுதிக்கு மதுபான கடை வேண்டாம் எனக்கோரி இரவு நேரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து இன்று தேர்பாதை என்ற இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என கூறி வருகின்றனர். அரசு உத்தரவு வந்த பின்பும் மதுபான கடையை அகற்றாமல் காலம் தாழ்த்தி வருவது வருத்தம் அளிப்பதாகவும் இந்த கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனக் கூறி சுமார் 6 மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...