உடுமலையில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் - 238 வழக்குகளுக்கு தீர்வு

தண்டனைக்குரிய சிறு வழக்கு 149 ல் 149 வழக்குகள் ரூ.2 லட்சத்து 29 ஆயிரத்து 400 க்கும், காசோலை மோசடி வழக்கு 6 ல் 2 வழக்குகள் ரூ. 9 லட்சத்து 50 ஆயிரத்திற்கும், வங்கி வராக்கடன் வழக்கு 600 ல் 18 வழக்குகள் ரூ. 15 லட்சத்து 60 ஆயிரத்து 500 க்கும் ஆகிய வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட கச்சேரி வீதியில் சார்பு நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் சார்பு மற்றும் உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.2 செயல்பட்டு வருகிறது. அத்துடன் தாலுக்கா அலுவலக வளாகத்தில் குற்றவியல் நீதிமன்றம் நடுவர் எண்.1, மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

இந்த நீதிமன்றங்களில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் (நேசனல் லோக் அதாலத்) நடைபெற்றது. 3 அமர்வுகளாக நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.மணிகண்டன் தலைமை வகித்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.எஸ்.பாலமுருகன், மடத்துக்குளம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் கே.விஜயகுமார், உடுமலை ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் ஆர்.மீனாட்சி ஆகியோர் முன்னிலையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.



அதன்படி தண்டனைக்குரிய சிறு வழக்கு 149 ல் 149 வழக்குகள் ரூ.2 லட்சத்து 29 ஆயிரத்து 400 க்கும், காசோலை மோசடி வழக்கு 6 ல் 2 வழக்குகள் ரூ. 9 லட்சத்து 50 ஆயிரத்திற்கும், வங்கி வராக்கடன் வழக்கு 600 ல் 18 வழக்குகள் ரூ. 15 லட்சத்து 60 ஆயிரத்து 500 க்கும், மோட்டார் வாகன விபத்து வழக்கு 57 ல் 57 வழக்குகள் ரூ. 3 கோடியே 60 லட்சத்து 22 ஆயிரத்திற்கும், இதர சிவில் வழக்கு 25 ல் 11 வழக்குகள் ரூ.3 கோடியே 57 லட்சத்து 79 ஆயிரத்து 884 க்கும், ஜீவனாம்ச வழக்கு 3 ல் ஒரு வழக்கு ரூ.20 ஆயிரத்திற்கும் ஆக மொத்தம் 840 வழக்குகள் எடுக்கப்பட்டு 238 வழக்குகளுக்கு ரூ.7 கோடியே 45 லட்சத்து 61 ஆயிரத்து 784 க்கு தீர்வு காணப்பட்டது.

இதில் அரசு வக்கீல்கள் சேதுராமன், ரவிச்சந்திரன், வக்கீல் சங்க தலைவர் மனோகரன், செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட இன்சுரன்ஸ் கம்பெனி மற்றும் வங்கி அதிகாரிகள், மூத்த மற்றும் இளம் வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...