கோவை லங்கா கார்னர் பகுதியில் பச்சை துணி மூலம் போஸ்டர் ஒட்டும் இடங்கள் மறைப்பு

கோவையில் மாநகராட்சி பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்படுவதால் மாநகரின் அழகு கெடுவதாக கூறி போஸ்டர்கள் ஒட்டும் இடம் முழுவதும் பச்சைத் துணி கொண்டு மாநகராட்சி பணியாளர்கள் மறைத்து வைத்துள்ளனர்.


கோவை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் தேர்தல் பணிகளில் போஸ்டர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல்வேறு கட்சிகள் போஸ்டர் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு எதிர்ப்புகளையும் தங்கள் கட்சியின் செல்வாக்கையும் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாநகரைப் பொறுத்தவரை லங்கா கார்னர், நஞ்சப்பா சாலை, கோட்டைமேடு, ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் அரசியல் கட்சியினர் அவர்களது போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். குறிப்பாக லங்கா கார்னர் பகுதி என்பது ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, டவுன்ஹால் செல்லும் பகுதியின் முக்கிய சந்திப்பு என்பதால் இங்கு ஒட்டப்படும் போஸ்டர்கள் மக்கள் பார்வைக்கு எளிதில் சென்றடையும்.

இந்நிலையில் இன்று (மார்ச்.14) மாநகராட்சியினர், லங்கா கார்னர் பகுதியில் வழக்கமாக போஸ்டர்கள் ஒட்டும் இடம் முழுவதும் பச்சைத் துணி கொண்டு மறைக்கப்பட்டுள்ளது. கோவையில் மாநகராட்சி பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்படுவதால் மாநகரின் அழகு கெடுவதாகவும், இதனால் போஸ்டர்கள் ஒட்ட மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே தடை விதித்திருந்தது. பின்னர் போஸ்டர்கள் ஒட்டும் சுவர்கள் முழுவதும் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டன.இந்நிலையில் தற்போது இப்பகுதி மறைக்கப்பட்டுள்ளதால் இங்கும் ஏதேனும் கலை ஓவியங்கள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...