உடுமலை அருகே திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் உண்டியல் பணம் எண்ணிக்கை

12 உண்டியல்கள் மூலமாக ரூபாய் நோட்டுகள் 4 லட்சத்து 42 ஆயிரத்து 325 ரூபாயும், நாணயங்கள் 37 ஆயிரத்து 881ரூபாயும் ஆக மொத்தம் 4 லட்சத்து 80 ஆயிரத்து 206 ரூபாய் சேர்ந்துள்ளது. கோசாலை உண்டியல் மூலமாக ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் ரூ. 1158 கிடைத்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் உள்ள மலைக்குன்றில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்வதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வருகை தருகின்ற பக்தர்கள் மும்மூர்த்திகளுக்கு நேர்த்தி கடனாகவும், காணிக்கையாகவும் அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை செலுத்தி வருகின்றனர். இந்த உண்டியல்கள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவிலில் உள்ள கோசாலை உண்டியல் உட்பட 13 உண்டியல் திறக்கப்பட்டது. பின்னர் அதில் சேகரமான காணிக்கை கோவில் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எண்ணப்பட்டது.



அதன்படி, 12 உண்டியல்கள் மூலமாக ரூபாய் நோட்டுகள் 4 லட்சத்து 42 ஆயிரத்து 325 ரூபாயும், நாணயங்கள் 37 ஆயிரத்து 881ரூபாயும் ஆக மொத்தம் ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்து 206 சேர்ந்துள்ளது. அதேபோன்று கோசாலை உண்டியல் மூலமாக ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் ரூ. 1158 கிடைத்துள்ளது.

இந்த உண்டியல்கள் கடந்த முறை ஜனவரி 10 -ம் தேதி எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் அறங்காவலர் குழு தலைவர் ரவி மற்றும் உறுப்பினர்கள், கோவில் செயல் அலுவலர் அமரநாதன் உள்ளிட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...