பராமரிப்பு பணி காரணமாக கோவை ரயில்கள் போத்தனூா் வழியாக இயக்கம் - சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு

பீளமேடு, இருகூா் ரயில் நிலையப் பகுதிகளில் பொறியியல் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் மார்ச் 19, 21, 23 ஆகிய தேதிகளில் ஆலப்புழா-தன்பாத் விரைவு ரயில், எா்ணாகுளம்-பெங்களூரு விரைவு ரயில் ஆகிய ரயில்கள் போத்தனூா்-இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: பீளமேடு, இருகூா் ரயில் நிலையப் பகுதிகளில் பொறியியல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை வழியாக இயக்கப்படும் இரு ரயில்கள் போத்தனூா் வழியாக இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் நேற்று மார்ச்.17 அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பீளமேடு, இருகூா் ரயில் நிலையப் பகுதிகளில் பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக மார்ச் 19, 21, 23 ஆகிய தேதிகளில் ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (எண்:13352), எா்ணாகுளம் - பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678) ஆகிய ரயில்கள் போத்தனூா்-இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயில்கள் போத்தனூா் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்று செல்லும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...