உடுமலையில் பறக்கும் படைத்துறையினர் சோதனையில் ரூ.1.88 லட்சம் பறிமுதல்

முறையான ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ 1 லட்சத்து 88 ஆயிரத்தை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், உடுமலை ஆர்.டி.ஓ வுமான ஜஸ்வந்த் கண்ணனிடம் ஒப்படைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கம்படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, உடுமலை-பெதப்பம்பட்டி சாலையில் பொட்டிய நாயக்கனூர் பிரிவு அருகே, கூடுதல் நிலையான கண்காணிப்பு குழுவினர் சரவணகுமார் தலைமையில் மகாவிஷ்ணு,கலைச்செல்வன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



இதனிடையே, அந்த வழியாக உடுமலை ராமசாமி நகரை சேர்ந்த டாக்டர் பின்னி என்பவர் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர் உரிய ஆவணம் இல்லாமல் ரூ 89 ஆயிரத்து 550 ஐ கொண்டு சென்றது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து கண்காணிப்பு குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து உடுமலை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

இதேபோல, கூடுதல் பறக்கும் படை பிரிவு 1ல் கார்த்திக் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி,போலீசார் ஹரிஹர மணிகண்டன், சந்தோஷ்வேல் உள்ளிட்டோர் பொள்ளாச்சி- உடுமலை சாலையில் கோமங்கலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன்(54) என்பவர் ஒட்டி வந்த காரை நிறுத்தி சோதனை இட்டனர்.அவர் முறையான ஆவணம் இல்லாமல் ரூ 98 ஆயிரத்து 500 கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து உடுமலை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.



அதைத் தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், உடுமலை ஆர்.டி.ஓ வுமான ஜஸ்வந்த் கண்ணனிடம் பறிமுதல் செய்த பணம் ரூ 1 லட்சத்து 88 ஆயிரத்து 50 ஐ ஒப்படைத்தனர். இந்த நிகழ்வின்போது கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் உடுமலை தாசில்தாருமான ப.சுந்தரம், தேர்தல் துணை தாசில்தார் சையதுராபியம்மாள், மண்டல துணை தாசில்தார் சந்திரசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...