பாஜக கூட்டணியில் கொலை குற்றவாளி ஜான் பாண்டியனுக்கு எம். பி சீட்..! - சித்தார்த் காளிங்கராயர் கடும் கண்டனம்..!

1993 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற கொலை வழக்கில் முக்கிய  குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட  ஜான் பாண்டியனை, தென்காசி தொகுதி எம்.பி வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது கண்டனத்துக்குரியது என்று  காளிங்கராயர் குடும்பத்தின் சார்பாக சித்தார்த் காளிங்கராயர் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்டத்தின் புகழ்பெற்ற காளிங்கராயர் குடும்பத்தை சேர்ந்தவர் சித்தார்த் காளிங்கராயர். தங்களுடைய குடும்பத்தை சேர்ந்த ஒருவரை நடு ரோட்டில் வைத்து துடிக்க துடிக்க கொலை செய்த வழக்கின்  முக்கிய குற்றவாளியான ஜான் பாண்டியனை தென்காசி தொகுதி வேட்பாளராக பாஜக  அறிவித்துள்ளது  கண்டனத்துக்குரியது என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 அன்று காலை 10.30 மணிக்கு, கோவை ஆர்.எஸ்.புரம், டி.பி. ரோட்டில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து காரில் திரும்பிய பொழுது, எங்கள் குடும்பத்தை சேர்ந்த விவேக் காளிங்கராயர் என்பவரை  கூலிப்படையினர் வெட்டிக் கொலை செய்தனர். 

இந்த கொலையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட, ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி மற்றும் வி.எல்.பி. பொறியியல் கல்லூரியின் தாளாளர் வெங்கடராம கிருஷ்ணன், மற்றும் கூலிப்படைத் தலைவன், ஜான் பாண்டியன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.  

இவ்வழக்கில், 2003 ஆம் ஆண்டு, ஜனவரி 6 ஆம் தேதி, கோவை முதலாவது விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  அதில்,  வெங்கடராம கிருஷ்ணன், கூலிப்படை  தலைவன், ஜான் பாண்டியன் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கில் தொடர்புடைய, டிரைவர் சுப்பிரமணியம் என்பவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ஒரு கொலை குற்றவாளியின் கட்சியுடன் கூட்டணி என்பதே கண்டனத்துக்குரியதாக பார்க்கப்படும் போது, இன்னும் ஒரு படி மேலே போய் அந்த கொலை குற்றவாளியை ஒரு தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக பாஜக போன்ற ஒரு கட்சி நியமிப்பது எங்களுக்கு மன உளைச்சலை தரும் விஷயமாகவே இருக்கிறது. 

அதுவும், மோடி போன்ற ஒரு பெரிய தலைவரின் தலைமையிலான பாஜக போன்ற ஒரு தேசிய கட்சி இது போன்ற செயல்களில் ஈடுபடுவது ஏமாற்றத்தையும், பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது", என்றார்.   

பாஜகவின் இந்த முடிவிற்கு தீவிரமாக கண்டனங்களை தெரிவித்த சித்தார்த் காளிங்கராயர், அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் போது, அவர்களது நடத்தை மற்றும் குற்றப் பின்னணிகளை  ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...