ஈரோடு எம்.பி தற்கொலைக்கு கூறப்படும் காரணத்தை நான் ஏற்க மாட்டேன் - கோவையில் வைகோ கண்ணீர் மல்க பேட்டி

எம்.பி சீட் கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றார் என்பது உண்மையல்ல. பலர் அவ்வாறு கூறி வந்தாலும். இதனை நான் ஒரு சதவிகிதம் கூட ஏற்க மாட்டேன் என்று கணேசமூர்த்தி இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த வைகோ தெரிவித்தார்.


கோவை: மதிமுக நிறுவனத் தலைவர்களில் ஒருவரும்,ஈரோடு எம்.பி. கணேசமூா்த்தி (77) இன்று, வியாழக்கிழமை அதிகாலை கோவை மருத்துவமனையில் காலமானார். கணேசமூர்த்தியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இவர் ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனது இல்லத்தில் கடந்த ஞாயிறன்று (மார்ச் 24) காலை திடீரென தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலை உயிரிழந்தார்.

அவரது இறுதி சடங்கில் பங்கேற்க இன்று கோவை விமான நிலையத்திற்கு வந்திருந்த மதிமுக பொதுச் செயலாளர், வைகோ செய்தியாளர்களை சந்தித்து நிகழ்ச்சி பட பேசினார்.

அப்போது பேசிய அவர், திமுக உறுப்பினராக வேண்டா வெறுப்பில் சேர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினரானார் கணேசமூர்த்தி. இப்போது திமுக உறுப்பினராக இருந்து கொண்டு வேறு பொறுப்பிற்கு வரமுடியாது என்று கூறியவர் அவர்.

சட்டமன்ற தேர்தலில் உரிய இடம் கொடுக்கப்படும் என அவரிடம் தெரிவிக்கபட்டு இருந்தது. அப்பொழுது, ஒரு வேளை இரு சீட் கொடுத்தால் பரிசீலனை செய்யுங்கள் என்று என்னிடம் கூறி இருந்தார். ஆனால், ஒன்று மட்டும் கொடுத்தால் துரை நிற்கட்டும் என்று சொல்லி இருந்தார். 

உயிருக்கு உயிராக 50 ஆண்டாக பழகி இருக்கின்றோம். கொள்கையும், லட்சியமும் பெரிது என வாழ்ந்தவர் கனேசமூர்த்தி. ஆனால் சில நாட்களாகவே அவர் மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாக என்னிடம் ஈரோடு மாவட்ட கட்சி நிர்வாகிகள் சொன்னார்கள். 

இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்க வேண்டியவர், இந்த முடிவிற்கு வருவார் என நான் கனவிலும் நினைக்கவில்லை. பெரிய இடி தலையில் விழுந்தததை போல இருக்கின்றது. அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை விட மருந்து குடித்து விட்டார் என்ற செய்தியே எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்து குடித்து விட்டார் என்ற போதே எனக்கு உயிர் போய்விட்டது, என்று கூறி வைகோ கதறி அழுதார். 

எம்.பி.சீட் கிடைக்காததால் இந்த முடிவிற்கு அவர் வந்தார் என்பது உண்மையல்ல, பலர் அவ்வாறு கூறி வந்தாலும், இதனை நான் ஒரு சதவிகிதம் கூட ஏற்க மாட்டேன், என்றார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...