கோவையில் உள்ள முன்னணி இன்குபேட்டர் ஏஐசி ரைஸ் மற்றும் டைசில் உயிரித் தொழில்நுட்ப பூங்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ஏஐசி ரைஸின் உயிரிசார் தொழில் நுட்பத்தை சார்ந்து செயல்படும் தொழில் முனைவோர்கள் ஆய்வுகளை மேற்கொள்ள ஆய்வுக் கூடங்கள் பயன்படுத்திக் கொள்ள வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள அடல் இன்குபேஷன் சென்டர் ரைஸானது உயிரித் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டின் தொழிற்பேட்டை முன்னேற்றக் கழகத்தின் கீழ் செயல்படுகின்ற டைசில் உயிரித் தொழில்நுட்ப பூங்கா உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.

இதன் வாயிலாக ஏஐசி ரைஸ் மற்றும் டைசில் உயிரி உயிரிசார் தொழில் நுட்பத்தை சார் தொழில் முனைவோர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, வணிக வெற்றியை நோக்கி அவற்றைத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. ஏஐசி ரைஸின் உயிரிசார் தொழில் நுட்பத்தை சார்ந்து செயல்படும் தொழில் முனைவோர்கள் ஆய்வுகளை மேற்கொள்ள ஆய்வுக் கூடங்கள் பயன்படுத்திக் கொள்ளவும் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏஐசி ரைஸின் சார்ந்து செயல்படும் தொழில் முனைவோர்கள் பயனடைவார்கள்.

இந்நிகழ்வில் ஏஐசி ரைஸின் சார்பில் இன்குபேஷன் மற்றும் நிர்வாக துணைத் தலைவர் பிரதீப் ராஜ் மற்றும் முதலீடுகள் மற்றும் வணிக மேலாண்மையின் துணைத் தலைவர் அருண்ராஜ் மாணிக்கராஜ் ஆகியோர் பங்கு பெற்றனர். மேலும், டைசில் உயிரி பூங்கா சார்பில் மேலாண்மை இயக்குநர் பூங்குமரன், நிர்வாக செயலர் காயத்ரி மற்றும் தலைமை மின் பொறியாளர் பழனியப்பன் ஆகியோர் பங்கு பெற்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...