வேட்பு மனுவை வாபஸ் பெற்றார் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர் சந்திரசேகர்

நாம் தமிழர் கட்சியின் வாக்கை பிரிக்க விரும்பவில்லை எனவும், தனது கட்சியின் மீது உள்ள அதிருப்தியின் காரணமாக இம்முடிவை எடுத்துள்ளதாக வேட்பு மனுவை திரும்ப பெற்ற சந்திரசேகர் என்பவர் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாவலட்சுமி என்பவர் அறிவிக்கப்பட்டு அவரும் தற்சமயம் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்படாத சூழலில் மைக் சின்னம் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டது. கரும்பு விவசாயி சின்னம் மூலம் கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்யினருக்கு இது பின்னடைவாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் மற்றொரு கட்சிக்கு நாம் தமிழர் கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டதால், குழப்பத்தை ஏற்படுத்தும் என பரவலாக கூறப்படுகிறது.



இந்த நிலையில் திருப்பூரில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த சந்திரசேகர் என்ற வேட்பாளர் இன்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் வாக்கை பிரிக்க விரும்பவில்லை எனவும், தனது கட்சியின் மீது உள்ள அதிருப்தியின் காரணமாகவும் இம்முடிவை எடுத்துள்ளதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதன் மூலம் வாக்குப்பதிவின்போது கரும்பு விவசாயி சின்னம் இடம்பெறாத சூழல் உள்ளது. இதனால் மைக் சின்னத்தை மேலும் கொண்டு சேர்க்கும் பணியில் நாம் தமிழர் கட்சியினர் இறங்கி உள்ளனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...