கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஸ்ரீ ரேணுகாதேவி கம்மவார் நாயுடு சங்கம் ஆதரவு

இந்து மக்களின் நீண்ட நாள் கனவான அயோத்தியில் ராமர் ஆலயத்தை மோடி அமைத்துள்ளார். எனவே 3 வது முறையாகவும் மோடி பிரதமர் ஆக வேண்டும். இதற்காக அண்ணாமலைக்கு வாக்களிக்க உள்ளதாக ஸ்ரீ ரேணுகாதேவி கம்மவார் நாயுடு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.


கோவை: அயோத்தியில் ராமர் ஆலயம் அமைத்திட்ட மோடிக்கு கோவையில் உள்ள ஸ்ரீ ரேணுகாதேவி கம்மவார் நாயுடு சங்கத்தைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் குடும்பத்தினர் கோவையில் அண்ணாமலைக்கு வாக்களிக்க உள்ளதாக கோவை மாவட்ட தலைவர் வெங்கட துரைபாலன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் ஸ்ரீ ரேணுகாதேவி கம்மவார் நாயுடு சங்கத்தில் 5 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் குடும்பத்தினர் உள்ளனர்.



இந்த நிலையில் இன்று கோவை இடிகரை பகுதியில் தேசிய வாக்காளர் பேரவையுடன் இச்சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த இச்சங்கத்தினர் நாடு 11 வது இடத்தில் இருந்து 5 வது இடத்திற்கு பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளது. இந்து மக்களின் நீண்ட நாள் கனவான அயோத்தியில் ராமர் ஆலயத்தை மோடி அமைத்துள்ளார். எனவே 3 வது முறையாகவும் மோடி பிரதமர் ஆக வேண்டும். இதற்காக சங்கத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் குடும்பத்தினர் பாஜகவிற்கு வாக்களிக்க உள்ளோம். கோவையில் போட்டியிடும் அண்ணாமலை மக்களுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்துள்ளதாகவும், எனவே அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பெறச் செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...