உரிய இழப்பீடு கேட்டு நல்லதங்காள் பாசன விவசாயிகள் தாராபுரம் அருகே கைகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்

நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இன்று முதல் தேர்தல் புறக்கணிப்பு செய்து தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதங்காள் அணை உள்ளது. இந்த அணைக்கு கடந்த 20-ஆண்டுகளுக்கு முன்பு நல்லதங்காள் அணை கட்டுவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த 750-க்கும் விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை தற்போது வரை வழங்கப்படாததால் விவசாயிகள் கையில் கருப்பு கொடி ஏந்தி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிக்கப் போவதாக பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இன்று முதல் தேர்தல் புறக்கணிப்பு செய்து தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். நல்லதங்காள் நீர்த்தேக்கணைக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க கோரி விவசாயிகள் கடந்த 6-மாதங்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று கைகளில் கருப்பு கொடி ஏந்தியும் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் கையில் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...