பிறந்து 3 நாட்களான ஆண் குழந்தை பிஏபி வாய்க்காலில் இறந்த நிலையில் கண்டெடுப்பு

பொத்தியம்பாளையம் பிரிவில் உள்ள பிஏபி வாய்க்காலில் மிதந்து வந்த பிறந்து மூன்று நாட்களான ஆண் குழந்தையின் உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாராபுரம் சாலை பொத்தியம் பாளையம் பிரிவில் பிஏபி கிளை வாய்க்கால் செல்கிறது. (பரப்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட வாய்க்கால்). பிறந்து மூன்று நாட்களான ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் பொத்தியம் பாளையம் பிரிவில் உள்ள பிஏபி வாய்க்காலில் மிதந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் காங்கேயம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில் இறந்து அழுகிய நிலையில் தண்ணீரில் மிதந்து வந்த அந்த அடையாளம் தெரிய தெரியாத ஆண் குழந்தையை மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து காங்கயம் காவல் ஆய்வாளர் கூறியதாவது,அடையாளம் தெரியாத இந்த குழந்தை எங்கிருந்து தண்ணீரில் அடித்துவரப்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை. மேலும் குழந்தையின் பெற்றோர்கள் யார் என்பதையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த குழந்தையை பார்க்கும் பொழுது பிறந்து 2 முதல் 4 நாட்களுக்குள் தான் இருக்கும் என்றும், குழந்தையை கடந்த 24 மணி நேரத்திற்குள் தான் தண்ணீரில் பெற்றோர்கள் வீசி எறிந்து இருக்க முடியும் என்றும் சந்தேகிக்கிறோம்.

மேலும் இந்த குழந்தையை பற்றிய தகவல் யாரேனும் அறிந்திருந்தால் உடனடியாக காங்கயம் காவல் ஆய்வாளர் (விவேகானந்தன் -94981 89123)ஐ அணுக வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...