கோவை ஆட்சியர் வளாகத்திற்குள் உள்ள மின்மாற்றியில் திடீர் தீ விபத்து

இ-சேவை மையம் எதிரே உள்ள மின்மாற்றியில் இன்று திடீரென தீ பிடித்து எரிந்தது. அந்த தீ அருகே இருந்த சருகுகளிலும் பரவி எரியத் துவங்கியது. இதனை பார்த்த அலுவலக ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.


கோவை: கோடை வெயிலின் தாக்கத்தால் கோவை மாவட்டத்தில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இ-சேவை மையம் எதிரே உள்ள மின்மாற்றியில் இன்று (ஏப்ரல்.6) திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.



அந்த தீ அருகே இருந்த சருகுகளிலும் பரவி எரியத் துவங்கியது. இதனை பார்த்த அலுவலக ஊழியர்கள் துணிகளை கொண்டும், தண்ணீர் ஊற்றியும் தீயை அணைத்தனர்.

இதையடுத்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு மின்மாற்றியில் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...