தேசத்தின் வளர்ச்சிக்கான திட்டத்தை அறிக்கையில் கூட எதிர்க்கட்சியினர் பயன்படுத்தவில்லை - தும்மனட்டியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் பிரச்சாரம்

ஊழல்வாதிகள் மற்றும் குடும்ப நலன் கொண்ட சுயநலவாதிகளால் உருவாக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சியை விரட்டுவோம் என்று கூறி பாஜக வேட்பாளர் எல்.முருகன் வாக்கு சேகரித்தார்.


நீலகிரி: மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன், நீலகிரி பாராளுமன்றம், உதகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தும்மனட்டி ஊர் மக்களைச் இன்று (ஏப்ரல்.7) சந்தித்து பரப்புரை செய்து, தாமரை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.



அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்வதன் அவசியம் குறித்து விளக்கினார். நடைமுறைக்கு சாத்தியமற்ற பொய் வாக்குறுதிகளை அறிக்கையாக தயாரித்து, கடந்த பத்தாண்டுகளில் நாம் கட்டியமைத்த பொருளாதாரக் கட்டுமானத்தை உடைப்பதையே நோக்கமாக கொண்டுள்ள எதிர்க்கட்சிகள், தேசத்தின் வளர்ச்சிக்கான திட்டத்தை அறிக்கையில் கூட பயன்படுத்தவில்லை.



இப்படி தகுதியற்றவர்களை மீண்டும் மீண்டும் நிராகரிக்க வேண்டியது நமது கடமை. முற்றிலும், ஊழல்வாதிகள் மற்றும் குடும்ப நலன் கொண்ட சுயநலவாதிகளால் உருவாக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சியை விரட்டுவோம் என்று கூறி வாக்கு சேகரித்தார். உடன் பாஜக நிர்வாகிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...