பொள்ளாச்சியில் எம்பிஎஸ் ஹேட்சரீஸ் நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை - ரூ.32 கோடி பறிமுதல் என தகவல்

பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ள எம்பிஎஸ் ஹேட்சரீஸ் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மகாலிங்கபுரம் மற்றும் அழகப்பா லேஅவுட் ஆகிய பகுதிகளில் உள்ள உரிமையாளர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.


கோவை: பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த அருள் முருகன் மற்றும் சரவண முருகன் ஆகியோர் தமிழக முழுவதும் எம்பிஎஸ் ஹேட் சரீஸ் என்னும் பெயரில் கோழி தீவனம் நிறுவனம் மற்றும் கோழிப்பண்ணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று தமிழக முழுவதும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையானது இன்றும் இரண்டாவது நாளாக தொடர்கிறது.



பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ள எம்பிஎஸ் ஹேட்சரீஸ் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.



மேலும் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் மற்றும் அழகப்பா லேஅவுட் ஆகிய பகுதிகளில் உள்ள அவர்களின் வீடுகளிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நேற்று மாலை துவங்கப்பட்டு இன்று காலை வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை கணக்கில் வராத 32 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...