தேர்தலை புறக்கணிக்கப் போவதாக குழிப்பட்டி மலைவாழ் மக்கள் அறிவிப்பு – அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆத்திரம்

குழிப்பட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த நாகம்மாள் (22) பிரசவ வலியில் துடித்த நிலையில் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த இளைஞர்கள் ஏழு கிலோமீட்டர் தூரம் கரடு முரடான மலை பாதையில் தொட்டில் கட்டி தூக்கி வந்து எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரக பகுதியில் குழிப்பட்டி, குருமலை, மாவடைப்பு என 15 மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. ஐந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் சாலை, குடிநீர், வீடு என அடிப்படை வசதி இல்லாமல் பல ஆண்டு காலமாக அவதிப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்கு கூட பாதிக்கப்படும் மக்களை தொட்டில் கட்டி தூக்கி வரும் அவலமும், உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் பல உயிர் இழப்பு சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இன்று குழிப்பட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த நாகம்மாள் (22) பிரசவ வலியில் துடித்த நிலையில் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த இளைஞர்கள் ஏழு கிலோமீட்டர் தூரம் கரடு முரடான மலை பாதையில் தொட்டில் கட்டி தூக்கி வந்து எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.



இந்த நிலையில் பல ஆண்டுகளாக சாலை வசதி மலைவாழ் மக்கள் வேண்டுமென மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் தற்போது வரைசாலை வசதி அமைக்கப்படாத நிலையில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மலைவாழ் மக்கள் புறக்கணிக்க போவதாகவும், மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு யாரும் ஓட்டு கேட்க வர வேண்டாம் என ஆவேசமாக தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...