உடுமலையில் கவர நாயுடு சமூக நலச்சங்கம் சார்பில் 11 ஆம் ஆண்டு யுகாதி பெருவிழா கொண்டாட்டம்

யுகாதி விழாவைமுன்னிட்டு நடைபெற்ற கோலப்போட்டி, பேச்சு போட்டி, தண்ணீர் நிரப்புதல் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ராம அய்யர் திருமண மண்டபத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுக்கா கவர நாயுடு சமூக நலச்சங்கம் சார்பில் 11 ஆம் ஆண்டு யுகாதி பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக ஹயக்கீரிவர் பூஜைகளும், குழந்தைகளின் பெயரில் அர்ச்சனைகளும் செய்யப்பட்டது. மேலும் திருமண வயதில் உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்திட சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பின்னர் பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து கோலப்போட்டி, பேச்சு போட்டி, தண்ணீர் நிரப்புதல் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது.



தலைமை சங்க நிர்வாகிகள் தலைவர் அரிமா லோகநாதன், செயலாளர் ராமதுரை, பொருளாளர் ஜெகநாதன்,தலைமை செயலாளர் முருகேசன், நிர்வாக ஆலோசகர் சுப்புராமன், துணைத் தலைவர்கள் கொழுமம் துரைசாமி, வெங்கட் ராமானுஜம், துணைச் செயலாளர்கள் சிவக்குமார், சிவசாமி, சட்ட ஆலோசர்கள் ஜோதி நாகராஜன், சீனிவாசன், மக்கள் தொடர்பு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் மாநில துணை பொதுச்செயலாளர் கொழுமம் தாமோதரன், குறிச்சிக் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன், அருண்குமார், பிரவீன், அங்கமுத்துஉட்படதிரளானோர்கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...