பிரதமர் மோடி வருகை: மேட்டுப்பாளையத்தில்  போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு..!

திருப்பூர், சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் அன்னூர் வந்து, அன்னூரில் இருந்து கோவை சாலை வழியாக கரியாம்பாளையம் சென்று அங்கிருந்து காரமடை வழியாக மேட்டுப்பாளையம் செல்லலாம், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும், பாஜக வேட்பாளர்கள் - கோவை, அண்ணாமலை, நீலகிரி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பொள்ளாச்சி - வசந்தராஜன், திருப்பூர்ஏ.பி.முருகானந்தம் ஆகியோரை ஆதரித்து, பிரதமர் மோடி காரமடை தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளபொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி, கோவை மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு மற்றும் 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 

பிரதமர் வருகை 

இன்று மதியம் 2.20 மணிக்கு கோவை விமான நிலையத்திலிருந்துஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, பொதுக் கூட்டம் நடக்கும் இடத்துக்கு அருகே ஜடையம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு பிரதமர் வரவுள்ளார்.



அங்கிருந்து பிரச்சாரம் நடக்கும் மேடைக்கு கார் மூலம் பிரதமர் வருவார் என்றும் பின்னர், பிரச்சாரம் முடிந்தவுடன் 3.30 மணிக்கு ஜடையம் பாளையத்திலிருந்து ஹெலிகாப்டரில் மீண்டும் கோவை விமான நிலையம் வந்து, அங்கிருந்து நாக்பூர் புறப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் ஹெலிகாப்டர் வந்திரங்க ஹெலிபேடு

அமைக்கப்பட்டுள்ள இடத்தில், மூன்று ஹெலிகாப்டர்கள் வரை தரை இறங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.



மேலும், ஹெலிகாப்டர் தளம் மற்றும்பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிற்கு

ட்ரோன்கள் பறக்க ஏற்கனவே தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

போக்குவரத்து மாற்றம். 

பிரதமர் வருகையையொட்டி, மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் வாகனங்கள் வழக்கம் போல மேட்டுப்பாளையம், காரமடை வழியாக கோவை செல்லலாம். இதே போல், ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் மேட்டுப்பாளையம் ஓடந்துறை ராமசாமி நகர் வழியாக சிறுமுகை சென்று அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லலாம்.

அதேபோல, திருப்பூர், சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் அன்னூர் வந்து அன்னூரில் இருந்து கோவை சாலை வழியாக கரியாம்பாளையம் சென்று அங்கிருந்து காரமடை வழியாக மேட்டுப்பாளையம் செல்லலாம், என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...