கோயம்புத்தூர் - பகத் கி கோதி (ஜோத்பூர், ராஜஸ்தான்) இடையே மே இறுதி வரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோயம்புத்தூர்-பகத் கி கோதி சிறப்பு ரயில், ஏப்ரல் 11 முதல் மே 23ம் வரை வாரத்தில் வியாழக்கிழமைகளில் அதிகாலை 2.30க்கு புறப்பட்டு, சனிக்கிழமைகளில் காலை 11.30க்கு பகத் கி கோதி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று ஏப்ரல்.10 வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் - பகத் கி கோதி (ஜோத்பூர், ராஜஸ்தான்) இடையே திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கச்சேகுட, சூரத், அகமதாபாத் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி வண்டி எண் 06181 கோயம்புத்தூர் - பகத் கி கோதி சிறப்பு ரயில், ஏப்ரல் 11 முதல் மே 23ம் வரை வாரத்தில் வியாழக்கிழமைகளில் அதிகாலை 2.30க்கு புறப்பட்டு, சனிக்கிழமைகளில் காலை 11.30க்கு பகத் கி கோதி சென்றடையும்.

மறு மார்க்கத்தில் 06182 பகத் கி கோதி - கோயம்புத்தூர் சிறப்பு ரயில், ஏப்ரல் 14ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.30க்கு புறப்பட்டு, புதன்கிழமைகளில் காலை 9.30க்கு கோவை வந்து சேரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...