பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சியின் சாதனைகள் வெற்றியை உறுதி செய்யும் -காங்கேயத்தில் ஜி.கே.வாசன் பிரச்சாரம்

தமிழகத்திலே தேசிய ஜனநாயக கூட்டணி இன்றைக்கு மக்கள் மனதிலே முதல் அணியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அனைத்து தொகுதிகளிலும் எங்களுடைய வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது என்று ஜி.கே.வாசன் பேசியுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ரவுண்டானா அருகே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜயகுமார் ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே. வாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தாமாக பொதுச்செயலாளரும், முன்னாள் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினருமான விடியல் சேகர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன், மாவட்டத் தலைவர் ஓகே சண்முகம், மாவட்டத் தலைவர் வி.பி. சண்முகம், பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் மோகனா சரவணன், வட்டாரத்தலைவர் தனபால் சாமி, மாவட்ட துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், தமாகா நிர்வாகி அருண் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திமுகவிற்கு எதிர்மறை வாக்கு அதிகரித்துக் கொண்டு போகின்றது. அதனுடைய தாக்கம் தேசிய ஜனநாயக கூட்டணி என மக்கள் முடிவெடுத்து இருக்கின்றார்கள். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பத்தாண்டு கால ஆட்சியினுடைய சாதனைகள் மக்கள் திட்டங்களே எங்களுடைய வெற்றியை உறுதி செய்யும் என்று நம்புகின்றோம். ஈரோடு போன்ற மிக முக்கியமான தொகுதியிலே பல பிரச்சனைகள் நிலுவையிலே இருக்கின்றது. அந்தப் பிரச்சினைகளை எல்லாம் எங்களுடைய வெற்றி வேட்பாளர் மக்களை நேரடியாக சந்தித்து மத்திய அரசுடைய உதவியோடு 100% மக்கள் பணியாற்றக்கூடிய நிலையில் உறுதியாக ஏற்படுத்துவார் என்று வாக்காளர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.



தமிழகத்திலே தேசிய ஜனநாயக கூட்டணி இன்றைக்கு மக்கள் மனதிலே முதல் அணியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே அனைத்து தொகுதிகளிலும் எங்களுடைய வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது. 55 வருடங்களுக்கு பிறகு தமிழகத்திலே ஒரு நல்லாட்சி அமைய இந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் அடித்தளம் ஏற்படுத்துவார்கள் என்று நம்பிக்கையோடு நாங்கள் மக்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...