காவிரி நதிநீர் பிரச்சினை ஏன் தீர்க்காமல் உள்ளது - மத்திய அரசுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி

மத்திய அரசுதான் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்று அரைவேக்காட்டுத்தனமாக சிலர் சொல்லி வருகின்றனர் என்று சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.



அப்போது பொதுமக்கள் அவர்களுக்கு தலைப்பாகை அணிவித்து தொண்டர்கள் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



பின்னர் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, மத்திய அரசுதான் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்று அரைவேக்காட்டுத்தனமாக சிலர் சொல்லி வருகின்றனர். அப்படியானால் காவிரி நதிநீர் பிரச்சினையை 50 ஆண்டு காலம் ஏன் இன்னும் தீர்க்காமல் வைத்துள்ளார்கள் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற அதிமுக ஆட்சியில் கேரளா அரசுக்கு தேவையான தண்ணீரை தமிழக அரசு வழங்கும். தமிழக அரசுக்கு தேவையான தண்ணீரை கேரளா அரசு வழங்கும் என்ற அடிப்படையில் சகோதரத்துடன் இரு மாநில முதல்வர்களும் பேச்சு வார்த்தை நடத்தி உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.

அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தினால் திமுக ஆட்சி திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டது. மத்திய அரசு தேவையான அளவு நிதியை வழங்கலாம். மத்திய அரசு நிதி இல்லாமலேயே அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி. அதேபோல் பாண்டியரு - புன்னம்பலா திட்டத்தை நிறைவேற்றவும், அதிமுக ஆட்சியில் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டது ஆனைமலையாரு நல்லாறு திட்டம் பாண்டியாரு -புன்னம்பலா திட்டத்தின் மூலம் தல பத்து டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்கும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுகிற அக்கறையும் ஆற்றலும் அதிமுகவுக்கு தான் உள்ளது. இதை வேறு யார் சொன்னாலும், அது தேர்தலுக்காக கொடுக்கும் பொய்யான வாக்குறுதி தான் என தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...