காவிரி நதிநீர் பிரச்சினை ஏன் தீர்க்காமல் உள்ளது - மத்திய அரசுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி

மத்திய அரசுதான் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்று அரைவேக்காட்டுத்தனமாக சிலர் சொல்லி வருகின்றனர் என்று சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.



அப்போது பொதுமக்கள் அவர்களுக்கு தலைப்பாகை அணிவித்து தொண்டர்கள் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



பின்னர் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, மத்திய அரசுதான் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்று அரைவேக்காட்டுத்தனமாக சிலர் சொல்லி வருகின்றனர். அப்படியானால் காவிரி நதிநீர் பிரச்சினையை 50 ஆண்டு காலம் ஏன் இன்னும் தீர்க்காமல் வைத்துள்ளார்கள் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற அதிமுக ஆட்சியில் கேரளா அரசுக்கு தேவையான தண்ணீரை தமிழக அரசு வழங்கும். தமிழக அரசுக்கு தேவையான தண்ணீரை கேரளா அரசு வழங்கும் என்ற அடிப்படையில் சகோதரத்துடன் இரு மாநில முதல்வர்களும் பேச்சு வார்த்தை நடத்தி உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.

அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தினால் திமுக ஆட்சி திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டது. மத்திய அரசு தேவையான அளவு நிதியை வழங்கலாம். மத்திய அரசு நிதி இல்லாமலேயே அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி. அதேபோல் பாண்டியரு - புன்னம்பலா திட்டத்தை நிறைவேற்றவும், அதிமுக ஆட்சியில் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டது ஆனைமலையாரு நல்லாறு திட்டம் பாண்டியாரு -புன்னம்பலா திட்டத்தின் மூலம் தல பத்து டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்கும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுகிற அக்கறையும் ஆற்றலும் அதிமுகவுக்கு தான் உள்ளது. இதை வேறு யார் சொன்னாலும், அது தேர்தலுக்காக கொடுக்கும் பொய்யான வாக்குறுதி தான் என தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...