வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு வாக்களிக்க குருமலை மற்றும் ஈசல்திட்டு மலைவாழ் முடிவு

குருமலை, ஈசல்திட்டு போன்ற பகுதிகளில் சாலை அமைப்பதற்காக டெல்லியில் இருந்து பாஜக சார்பில் உத்தரவு தற்போது வாங்கி கொடுத்த நிலையில் வருகின்ற பொள்ளாச்சி பாராளுமன்றத் தேர்தலில் மலைவாழ் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கு போவதாக தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் குரு மலை, குழிப்பாட்டி, ஈசல்திட்டு, கோடந்தூர், ஆட்டு மலை உட்பட பத்துக்கு மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. மலை கிராமங்களில் இருந்து அவசர தேவைகளுக்கு அரசு மருத்துவமனைக்கு செல்வதற்கு குருமலையில் இருந்து காடம்பாறை, அட்டகட்டி வழியாக சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் வர வேண்டிய நிலை உள்ளது.



மேலும் குருமலையில் இருந்து 5 கிலோ மீட்டருக்கு மலைப்பகுதியில் சாலை அமைத்தால் விரைவாக உடுமலை அரசு மருத்துவமனையை அடையலாம். சாலை வசதி இல்லாத காரணத்தால் மழை கிராமங்களில் இருந்து உடல்நலம் மற்றும் கர்ப்பிணி பெண்களை அரசு மருத்துவமனைக்கு கிராம மக்கள் தற்பொழுது வரை தொட்டில் கட்டி தூக்கி வருகின்றனர். இதனால் ஒரு சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுவதுண்டு.

இதற்கிடையில் கடந்த 40 ஆண்டு காலமாகவே அதிமுக, திமுக அரசியல் கட்சியினர் தேர்தலுக்கு மட்டும் மலை கிராம பகுதிகளுக்கு வருகை புரிந்து அடிப்படை வசதிகள் மற்றும் சாலை வசதிகள் செய்து தரப்படும் என வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால் வாக்குறுதி எதுவும் நிறைவேற்றி தருவதில்லை.

இந்த நிலையில் பாஜக சார்பில் குருமலை, ஈசல்திட்டு போன்ற பகுதிகளில் சாலை அமைப்பதற்காக டெல்லியில் இருந்து உத்தரவு தற்போது வாங்கி கொடுத்த நிலையில் வருகின்ற பொள்ளாச்சி பாராளுமன்றத் தேர்தலில் மலைவாழ் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கு போவதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...