கோவை ஆட்சியர் கூறியும் பாதுகாப்பு வழங்கவில்லை என சுயேட்சை வேட்பாளர் கண்ணீருடன் புகார்

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பல நாட்களாக கூறியும், இது நாள் வரை காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கவில்லை என சுயேட்சை வேட்பாளர் நூர் முகமது கண்ணீர் மல்க தெரிவித்தார்.


கோவை: நாடாளுமன்ற தேர்தலில், பொள்ளாச்சி தொகுதியில் நூர்முகமது என்ற வேட்பாளர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவருக்கு ஹெல்மெட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தனக்கு உயிர் பாதுகாப்பு வேண்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார்.

அவரது மனு மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட ஆட்சியரும் கடிதம் அனுப்பி உள்ளார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கூறியும் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என நூர்முகமது குற்றம் சாட்டியுள்ளார்.



மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அவரது பிரச்சார வாகனத்துடன் இன்று ஏப்ரல்.13 வந்த நூர் முகமது, உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பல நாட்களாக கூறியும், இது நாள் வரை காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும் இதற்கு முன்பு தேர்தலில் போட்டியிடும் போதும் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...