கோவை ஆட்சியர் கூறியும் பாதுகாப்பு வழங்கவில்லை என சுயேட்சை வேட்பாளர் கண்ணீருடன் புகார்

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பல நாட்களாக கூறியும், இது நாள் வரை காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கவில்லை என சுயேட்சை வேட்பாளர் நூர் முகமது கண்ணீர் மல்க தெரிவித்தார்.


கோவை: நாடாளுமன்ற தேர்தலில், பொள்ளாச்சி தொகுதியில் நூர்முகமது என்ற வேட்பாளர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவருக்கு ஹெல்மெட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தனக்கு உயிர் பாதுகாப்பு வேண்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார்.

அவரது மனு மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட ஆட்சியரும் கடிதம் அனுப்பி உள்ளார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கூறியும் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என நூர்முகமது குற்றம் சாட்டியுள்ளார்.



மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அவரது பிரச்சார வாகனத்துடன் இன்று ஏப்ரல்.13 வந்த நூர் முகமது, உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பல நாட்களாக கூறியும், இது நாள் வரை காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும் இதற்கு முன்பு தேர்தலில் போட்டியிடும் போதும் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...