கோவையில் உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவஞ்சலி - நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை

கோவை மண்டல இணை இயக்குனர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தீயணைப்பு நிலையத்தில் உள்ள நினைவு தூணில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் தீயணைப்பு வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.


கோவை: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் ஆண்டு தோறும் ஏப்ரல் 14ம் தேதி தீ தொண்டு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதில், தீயணைப்பு துறையில் மீட்பு பணியின் போது உயிரிழந்த வீரர்களின் நினைவாக அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இதேபோல், இன்று (ஏப்ரல்.14) காலை கோவை ரயில் நிலையம் ரோட்டில் உள்ள தெற்கு தீயணைப்பு நிலையத்தில் உயிர் நீத்தாருக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கோவை மண்டல இணை இயக்குனர் சரவணகுமார் தலைமை வகித்தார்.



அப்போது அவர் தீயணைப்பு நிலையத்தில் உள்ள நினைவு தூணில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.



இதேபோல், தீயணைப்பு வீரர்களும் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் புலுகாண்டி, உதவி அலுவலர்கள் அழகர்சாமி, ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து இன்று முதல் வருகிற 20ம் தேதி வரை தீ தொண்டு நாள் அனுசரிக்கப்படுவதால் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...