கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் தேர்தல் பயிற்சி வகுப்பு ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026க்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran IAS நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்ற அறிவுரை வழங்கினார்.


Coimbatore: தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026க்கான வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran IAS இன்று (15.04.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் 117 கவுண்டம்பாளையம், 118 கோயம்புத்தூர் வடக்கு, 121 சிங்காநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.







கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட G.N.Mills கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நவ இந்தியா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி சாலை, பீளமேடு P.S.G. தொழில்நுட்ப கல்லூரி ஆகிய இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.






வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்கு பதிவு அலுவலர் 1, வாக்கு பதிவு அலுவலர் 2 மற்றும் வாக்கு பதிவு அலுவலர் 3 ஆகிய அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டார். பயிற்சியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றிட வேண்டுமென அறிவுரைகளை வழங்கினார்.






தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்காக தபால் வாக்கு செலுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தேர்தல் செயல்முறைகள் சரியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.






இந்த ஆய்வுகளின் போது, தேர்தல் நடத்தும் அலுவலர்/வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) வினோத்குமார், தேர்தல் நடத்தும் அலுவலர்/தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) வாணிலட்சுமி ஜெகதாம்பாள், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மதுரா, கோயம்புத்தூர் வடக்கு வட்டாட்சியர் விஜயரங்க பாண்டியன், தேர்தல் நடத்தும் அலுவலர்/உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி, உதவி ஆணையர்கள் சண்முகம், நர்மதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...