கோவையில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு - மீறினால் 2 ஆண்டு சிறை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

வெளியூரிலிருந்து பிரச்சாரம் மேற்கொள்ள வந்தவர்கள் மாலை 6 மணிக்கு மேல் தொகுதியில் இருக்கக் கூடாது. அரசியல் கட்சியினர் வாக்காளர்களை தங்கள் வாகனங்களில் வாக்குச் சாவடிக்கு அழைத்து வரக் கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


கோவை: தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். இந்த நிலையில் இன்று மாலை பிரச்சாரம் ஓய்ந்த பிறகு எந்தவொரு அரசியல் கட்சியும், வேட்பாளரும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடக் கூடாது.

பேஸ்புக், வாட்ஸ் ஆப், எக்ஸ் வலைதளம் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் பிரச்சாரம் செய்யக் கூடாது. மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொள்பவர்களுக்கு 2 ஆண்டு தண்டனை விதிக்கப்படும். அல்லது அபராதம் விதிக்கப்படும்.

வெளியூரிலிருந்து பிரச்சாரம் மேற்கொள்ள வந்தவர்கள் மாலை 6 மணிக்கு மேல் தொகுதியில் இருக்கக் கூடாது. அரசியல் கட்சியினர் வாக்காளர்களை தங்கள் வாகனங்களில் வாக்குச் சாவடிக்கு அழைத்து வரக் கூடாது.

தேர்தல் முகவர் ஒரு வாகனத்திலும், கட்சிக்காரர்கள் ஒரு வாகனத்திலும் பயணிக்க வேண்டும். வாக்குச் சாவடிக்கு 200 மீட்டருக்கு முன்பே அரசியல் கட்சியினர் தங்கள் தற்காலிக கூடாரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.

அங்கு இரு நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாகன அனுமதி மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுக்கென ஒரு வாகனத்தில் பயணிக்கலாம். எந்த ஒரு தேர்தல் விவகாரத்தையும் திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்எம், ரோடியோ, வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டா, டிவிட்டர் போன்ற சாதனம் வாயிலாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...