வாக்குச்சாவடிகளில் அடையாளச் சான்றாக பயன்படுத்தக்கூடிய ஆவணங்கள் பட்டியல் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி(தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பணி அட்டை), கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வாக்குச் சாவடிகளில் அடையாளச் சான்றாக பயன்படுத்தலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (ஏப்ரல்.17) தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கோவையில் வரும் 19ஆம் தேதி நடைபெறும் தேர்தல் அன்று, வாக்குச் சாவடிகளில் அடையாளச் சான்றாக உபயோகப்படுத்த கூடிய ஆவணங்கள் குறித்த பட்டியலை தெரிவித்துள்ளார். அதன்படி,

1.வாக்காளர் அடையாள அட்டை

2.ஆதார் அட்டை

3.மகாத்மா காந்தி(தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பணி அட்டை)

4.கணக்கு புத்தகங்கள் (வங்கி அஞ்சலகங்களால்

புகைப்படத்துடன் வழங்கப்பட்டவை)

5.மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை

(மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது)

6.ஓட்டுனர் உரிமம் (பணியாளர் அடையாள அட்டை)

7. இயலாமைக்கான தனித்துவமான அட்டை (இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்டது)

8.வருமான வரி (நிரந்தர கணக்கு எண் அட்டை)

9.ஸ்மார்ட் கார்டு (தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டது)

10.இந்திய கடவுச்சீட்டு 10 ஓய்வூதிய ஆவணம் (புகைப்படத்துடன் கூடியது)

11.அடையாள அட்டை (மத்திய/மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது)

12.அலுவலக அடையாள அட்டை (பாராளுமன்ற/சட்டமன்ற பேரவை/சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது) ஆகியவற்றை கொண்டு வாக்களிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...