வால்பாறையில் மேளதாளங்களுடன் திமுகவினரின் இறுதி கட்ட பிரச்சாரம் நிறைவு

திமுக கட்சியினர் காந்தி சிலை வளாகத்தில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல் அதிமுகவினர் புதிய பேருந்து நிலையம் பகுதியிலும், பாரதிய ஜனதா கட்சியினர் அண்ணா திடல் பகுதியிலும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


கோவை: நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்க இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி நேற்று மாலை 6 மணி அளவில் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பிரச்சாரம் முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் திமுக, அதிமுக, பிஜேபி போன்ற கட்சிகள் வால்பாறையில் திமுக கட்சியினர் சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் காந்தி சிலை வளாகத்திலும், இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல் அதிமுகவினர் புதிய பேருந்து நிலையம் பகுதியிலும், பாரதிய ஜனதா கட்சியினர் அண்ணா திடல் பகுதியிலும் இறுதி கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக நகரச் செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் காந்தி சிலை வளாகத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட திமுக கட்சியினர் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



இதில் முன்னாள் நகர மன்ற தலைவர் கோ.கணேசன், திமுக ஆட்சியின் சாதனைகளைப் பற்றியும் திமுக கட்சியை வால்பாறை மக்களுக்கு செய்த சாதனைகளைப் பற்றியும், மகளிர் பேருந்து இலவச பேருந்து மற்றும் மகளிர் உதவித்தொகை மற்றும் பல்வேறு திட்டங்களை வலியுறுத்தி வாக்கு சேகரித்தனர்.

கட்சியினர் மேள தாளங்கள் தட்டி டான்ஸ் ஆடி இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு நிறைவு செய்தனர். இதில் நாங்க நகராட்சி நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, துணைத்தலைவர் செந்தில்குமார், திப்பம்பட்டி ஆறுச்சாமி, ஜே.பாஸ்கர், செல்வம், மகுடீஸ்வரன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். இதில் காவல்துறையினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு 6 மணி அளவில் பிரச்சாரம் நிறைவு பெற்றது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...