சுங்கம் பகுதியில் வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார் கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி

சுங்கம் பகுதியில் உள்ள நிர்மலா பெண்கள் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, பின்னர் ஓட்டுபோட்டுவிட்டு வந்தவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.


கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான ஓட்டுப்பதிவு பல்வேறு மையங்களில் இன்று (ஏப்ரல்.19) விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற திட்டத்தின் கீழ் வாக்குச்சாவடி மையங்களில் மரக்கன்றுகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.

பின்னர் வாக்கு போட்டு விட்டு வருபவர்களுக்கு இந்த மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் கோவை சுங்கம் பகுதியில் உள்ள நிர்மலா பெண்கள் கல்லூரிக்கு இன்று மதியம் சென்றார். பின் வாக்குச்சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்குப்பதிவு குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த மரக்கன்றுகளை ஒட்டு போட்டுவிட்டு வருபவர்களுக்கு வழங்கினார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...