காற்று வெளியிடை: சஸ்பென்ஸை உடைத்த கார்த்தி

மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் கார்த்தி- அதிதீ ராவ் நடிப்பில் வெளிவர இருக்கும் காற்று வெளியிடை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. 

ஆடியன்ஸின் பல்ஸை நன்கு அறிந்த இயக்குனர் மணிரத்னம், காற்று வெளியிடையின் 'பர்ஸ்ட் லுக்' தொடங்கி பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வரை அனைத்தையும் சுவாரஸ்யமான முறையியல் வழங்கியுள்ளார். 



படத்தில் கார்த்தி மற்றும் அதிதீ-யின் கேரக்ட்டர்கள் என்ன? என்பது ட்ரெய்லர் பார்த்த பின் கொஞ்சம் தெரிந்திருக்கும். இந்த நிலையில், கோவையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் காற்று வெளியிடை படத்தின் சில சாராம்சங்களை நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார். 

கோவை 'ப்ரூக் பீல்ட்ஸ்' வணிக வளாகத்தில் நடிகர் கார்த்திக் மற்றும் அதிதீ ராவ் இன்று பகல் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கார்த்தி கூறியதாவது:-

பத்து வருடங்களுக்கு முன்பு நான் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். இன்று அவரது படத்திலேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. மணிரத்னத்தின் படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாக இருந்து வருகிறது. காற்று வெளியிடை படத்தில் என்னை வேறு ஒருவனாக மாற்றிவிட்டார். அவரிடம் கேட்டுள்ளேன், 'உதவி இயக்குனராக இருந்தபோது என்னை திட்டியுள்ளீர்கள். ஆனால், உங்கள் படத்தில் நடிக்கும் நடிகனை நீங்கள் திட்டவே இல்லையே' என்று. 

தொடர்ந்து, அவர் எனக்கு நிறைய அறிவுரைகள் வழங்கினார். படத்தின் ஒரு காட்சியில் சின்னதாக சிரித்தேன். அப்போது மணிரத்னம் என்னை அழைத்தார். 'இந்த படத்தில் கார்த்தி வரக்கூடாது. வருண் தான் எனக்கு வேண்டும்' என்றார். ஆம், படத்தில் என் பெயர் வருண். 

காற்று வெளியிடை

ரோஜா, பாம்பே போன்று காற்று வெளியிடை படத்தில் எந்த ஒரு சர்ச்சைக்குரிய கருத்துக்களும் இல்லை. இப்படம் சமூகத்திற்கு மெசேஜ் சொல்லும் படம் இல்லை. முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்தே படம் உருவாக்கப்பட்டுள்ளது. 



படத்தில் நான் போர் விமானியாக நடித்துள்ளேன். நாம் எத்தனையோ கேரக்ட்டர்களை திரைப்படத்தின் வாயிலாக பார்த்திருப்போம். ஆனால், போர் விமானியின் வாழ்க்கையில் நடப்பவை குறித்து அறிந்திருக்க மாட்டோம். 

மணிரத்னத்தின் மற்ற பட ஹீரோக்களை போல வருண் மிருதுவானவன் கிடையாது. ஒரு ராணுவ அதிகாரி என்பதால் சற்று மூர்க்கத்தனமான கதாபாத்திரம். காதலையும் அவ்வாறே வெளிப்படுத்துவான். 



படத்தின் காட்சிகள் லடாக், ஸ்ரீ நகர் போன்ற இடங்களில் தான் படமாக்கப்பட்டுள்ளது. ஓ காதல் கண்மணி திரைப்படத்தின் காட்சிகளில் பெரும்பாலானவை வீட்டின் அறையிலேயே படமாக்கப்பட்டது. ஆனால், காற்று வெளியிடை திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகள் பத்து வருடங்களுக்கு பிறகு பார்த்தாலும் சலிப்புத்தன்மை ஏற்படுத்தாதவாறு இருக்கும். 



அடுத்ததாக உண்மை சம்பவம் ஒன்றை மையமாக வைத்து சதுரங்க வேட்டை திரைப்படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் 'தீரன் அதிகாரம் ஒன்று' என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். தொடர்ந்து, கொம்பன் படத்தை போல கிராமத்து படங்களில் நடிக்கிறேன். இவ்வாறு கார்த்தி கூறினார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...