உலக புவி தினத்தை முன்னிட்டு மதுக்கரை பிள்ளையார்புரத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா

தான்றி காய், பரு பலா, ஒதியன், முள் முருங்கை, வேப்பமரம், புங்க மரம், நாவல் மரம், சிவகுண்டலம், பரம்பை, கொடுக்காபுலி போன்ற 100 வகைகளில் 1000 மரங்களை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தன்னார்வலர்கள் நட்டனர்.


கோவை: உலக புவி தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் இன்று (ஏப்ரல்.22) நடைப்பெற்றது.



இதில் கே.பி.ஆர்.கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தான்றி காய், பரு பலா, ஒதியன், முள் முருங்கை, வேப்பமரம், புங்க மரம், நாவல் மரம், சிவகுண்டலம், பரம்பை, கொடுக்காபுலி போன்ற 100 வகைகளில் 1000 மரங்கள் நட்டனர்.



இவ்விழாவில் வனவர் கோ.ஜோதிர்லிங்கம், தமிழ்நாடு வனத்துறை தலைவர் பி.வி.கோபால், பூளைமேடு கன்சியூமர் வாய்ஸ் இரா.மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...