ரயில் நிலையங்களில் மலிவு விலை உணவு விற்பனை தொடங்கப்பட்டது

ஐஆர்சிடிசி மூலம் தெற்கு ரயில்வேயில் 34 ரயில் நிலையங்களில் மலிவு விலையில் உணவு விற்பனை துவங்கப்பட்டுள்ளது. கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட நிலையங்களில் உணவு கிடைக்கிறது.


கோவை: இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) தொடங்கிய முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிகளுக்கு கோடை காலத்தில் மலிவு விலையில் உணவு விற்பனையை செய்யும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, சேலம், ஈரோடு, கோவை மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 34 ரயில் நிலையங்களில் இந்த திட்டம் ஏப்ரில் 24 அன்று துவங்கியது.

கோவை மற்றும் மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் 200 கிராம் எடை கொண்ட எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர்சாதம், கிச்சடி ஆகியவற்றை எகனாமி மீல்ஸ் என்ற பெயரில் ரூ. 20க்கு விற்பனை செய்கின்றனர். மேலும், 325 கிராம் எடையிலான பூரி மாசல் மற்றும் பஜ்ஜி ஜனதா கானா என்பதில் ரூ. 20க்கும், 350 கிராம் மசால் தோசை ஸ்னாக் மீல்ஸ் என்ற பெயரில் ரூ. 50க்கும், 200 மில்லி தண்ணீர் பாட்டில்கள் ரூ. 3க்கு விற்பனை செய்யப்படுகின்றன. பொது பெட்டிகளுக்கு அருகே உணவுகள் எளிதில் கிடைக்க வசதியாக நடைமேடையில் உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை ரயில்நிலையத்தில் முதலாவது நடைமேடையில் மேலும் உணவகங்கள் நிலையமைப்பு மூலமும், இந்த சேவைக்கு பயணிகள் நல்ல வரவேற்பையும் அளித்துள்ளனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...