அடிப்படை பிரச்சனைகளை தீர்க்காவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் -கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி


கோவை கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட சிங்காநல்லூர் பேருந்து  நிலையம், உப்பிலிபாளையம், வரதராஜபுரம், சௌவுரிபாளையம் ஆகிய பகுதிகளில் பொது பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளதாகவும் இதனை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கபட்டது.



இது குறித்து அவர்கள் கூறும்போது, 56 வார்டு பகுதியில் பாதாள சாக்கடைக்காக சாலையில் குழி தோண்டப்பட்டு பணி நிறைவேறாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமதிற்கு உள்ளாவதுடன் விபத்துகள் ஏற்படுவதாக கூறினர். மேலும் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள சக்கடை குப்பைகளால் சுகாதார கேடு எற்படுவதாக குற்றம் சாட்டினர். 66வது வார்டு பகுதியில் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகுவதுடன் தண்ணீர் தேக்கத்தால் சாலைகள் பழுதடைந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவதாக கூறியவர்கள் உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளி சத்துணவு கூடம் அருகிலேயே சாக்கடை கால்வாய் ஓடுவதால் அங்கு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு சுகாதார கேடு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் அதை மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...