ஒரு குடம் குடிநீர் 12 ரூபாய், மாவட்ட நிர்வாகம் தங்களை புறக்கணிப்பதாக 100க்கும் மேற்பட்ட பெண்கள் மனு

கோவை, குனியமுத்தூர் பிளையார் புரம் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருவதாக கூறியவர்கள் தாங்கள் வசித்து வரும் பகுதியில் உப்பு தண்ணீர் குழாய் மாநகராட்சி சார்பில் அமைக்கபட்டுள்ளதாகவும் இதில் தற்போது 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக கூறினர். 



மேலும் தங்கள் பகுதியில் தெரு விளக்கு கம்பம் அமைக்கபட்டு பல வருடங்கள் ஆகியும் விளக்குகள் பொருத்தப்படாமலேயே உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக கூறியவர்கள் உப்பு தண்ணீர் முறையாக வழங்காத நிலையில் குடி நீருக்காக வாடகை வாகனம் அமர்த்தப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் நீர் எடுத்து வந்து உபயோகிப்பதாகவும் இதற்காக ஒவ்வெரு முறையும் ரூபாய் 350லிருந்து ரூபாய் 500 வரை செலவாகுவதாகவும் தனியார் வாகனம் மூலம் ஒரு முறை அதிகபட்சமாக 30 குடங்களில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுவதாக கூறிகின்றனர். 

மேலும், 1 குடம் குடிதண்ணீர் பெற ரூபாய் 12 செலவழிப்பதாக கூறினர். இது குறுத்து மாமன்ற உறுப்பினரிடம் கூறினால் ஆக்கிரமிப்பு இடத்தில் இருக்கும் உங்களுக்கு எதுவும் செய்து தர முடியாது என கூறுவதாகவும் தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டுக்காக தங்களை தேடி வருவதாக குற்றம் சாட்டினர். தங்கள் பிரச்சனை குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கபட்டும் எந்த ஒரு நடவடிக்கையும், மேற்கொள்ளவில்லை இதுவரை 3 ஆட்சியர்கள் மாறியுள்ளனர் ஆனால் தங்கள் பிரச்சனை இன்னும் தீரவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...