பொய் வழக்கு பதிவு செய்து வாலிபரை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி உறவினர்கள் போராட்டம்

விசாரணைக்காக அழைத்து சென்ற வாலிபரை கடுமையாக தாக்கி, பொய் வழக்கு பதிவு செய்த கோவை சரவணம்பட்டி காவல்துறை ஆய்வாளர் ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர், ஆனந்த் இவரையும் அவரது அண்ணன் அரவிந் என்பவரை கொலை வழக்கு தொடர்பாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் மார்ச் மாதம் ஜாமீனில் வந்த ஆனந்தை , கொலை முயற்சி வழக்கு தொடர்பாக சரவணம்பட்டி காவல்துறையினர் கடந்த வாரம் விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை தாக்கியதில் கால் உடைந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆனந்தின் தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இந்நிலையில் தன் சகோதரரை தாக்கி பொய் வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி காவல்துறை ஆய்வாளர் ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆனந்தின் தங்கை மற்றும் அவர்களது உறவினர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சரவணம்பட்டி காவல்துறையினர் வேண்டும் என்றே தன் சகோதரன் மீது பொய் வழக்கு தொடுத்து சித்தரவதை செய்துள்ளதாகவும், இது குறித்த கேட்ட தன்னையும் தனது தாயாரையும் சாதி பெயரை கூறி தாகாத வார்தையில் திட்டியதாகவும் குற்றம்சாட்டினார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சு வார்தையில் ஈடுபட்டதை அடுத்து, சரவணம்பட்டி காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து கலைந்து சென்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...