தாராபுரத்தில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இரண்டு பேர் கைது - ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் தாராபுரம் காவல் உதவி ஆய்வாளர் சிவராஜ் தலைமையில் ஐடிஐ கார்னர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் தகவல் கூறியதை தொடர்ந்து இரண்டு நபர்களையும் அழைத்துச் சென்று தாராபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தாராபுரம் காவல் ஆய்வாளர் ரவி தலைமையில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது. அப்போது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி கீரனூர் பகுதியைச் சேர்ந்த ராம்பாலி என்பவரது மகன் தேவேஷ் ராஜக் வயது 32 என்பதும், மற்றொருவர் தாராபுரம் கொண்டரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாதிக் என்பவரது மகன் யாசர் ஆர்பத் வயது 20 என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...