எல்லாரும் மனரீதியில் ஒன்றாக சேர்ந்து கோவிலை காப்பாற்றுங்கள் - பொள்ளாச்சியில் முன்னாள் போலீஸ் ஐஜி பொன்மாணிக்கவேல் பேட்டி

பிரச்சனை என்று வரும்போது கோவில் சூறையாடப்படுகிறது. இப்போதாவது திருந்தி வாருங்கள். எல்லாரும் மனரீதியில் ஒன்றாக சேர்ந்து கோவிலை காப்பாற்றுங்கள் என்று முன்னாள் போலீஸ் ஐஜி பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிவனடியார்கள், முருக பக்தர்கள் அனைத்து ஆன்மீக அன்பர்களையும் ஒருங்கிணைக்கும் ஆன்மீக விழா நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் போலீஸ் ஐஜி பொன்மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்.

இதில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு சிவனடியார்கள், முருக பக்தர்கள், ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு முன்னாள் போலீஸ் ஐஜி .பொன்மாணிக்கவேல் பேட்டி அளிக்கையில் கூறியதாவது. இந்துக்கள் உடைந்தனர், ஆதீனம் ஒரு புறம், வைணவர்கள் ஒரு புறம், சைவர்கள் ஒருபுறம் என அனைவரும் உடைந்து தொங்குவதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் தொங்கிக் கொள்ளுங்கள். கருத்து வேறுபாடுகள் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆனால் ஒன்றாக வாருங்கள். பிரச்சனை என்று வரும்போது கோவில் சூறையாடப்படுகிறது. இப்போதாவது திருந்தி வாருங்கள் எல்லாரும் மனரீதியில் ஒன்றாக சேர்ந்து கோவிலை காப்பாற்றுங்கள். கோவிலுக்கு மட்டும் பிரச்சினை என்றால் எல்லாரும் ஒன்றாய் சேருங்கள். இந்த கூட்டத்தில் மட்டுமே எல்லாரையும் ஒருங்கிணைக்க காரணம் தனித்தன்மையை வைத்துக் கொள்ளுங்கள் விட்டு விடாதீர்கள்.

சுதந்திரமாக செயல்படுங்கள். ஆனால் பிரச்சனை என்று வரும்போது கோவில் சம்பந்தப்பட்டது கோவில் இருக்கக்கூடிய தெய்வ விக்கிரகங்களுக்கு கோவில் சொத்துக்களுக்கு பிரச்சினை வரும்போது காக்கா கூட்டம் போல் ஒன்றாக வரவேண்டும் என்ற ஒரு சின்ன முயற்சி எடுக்கிறேன். இதிலும் நமக்கு பின் வாங்கியது எல்லாம் வரும் ஜெயிக்க எல்லாம் என்னால் முடியாது நன்றாக தெரியும். பின்வாங்கி வர முயற்சி அதிகம் பன்னிகொண்டேதான் போவேன். எல்லாரையும் ஒன்றாக கொண்டு வருகிறோம் என்றார்.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...