கோவையில் ஆன்லைன் டிரேடிங் மூலம் பல கோடி மோசடி - மோசடி பெண்ணை பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

பல கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிவிட்டு துபாய்க்கு சென்று, அங்கேயும் மோசடி செய்துவிட்டு கேரளா திரும்பிய மதுமிதா என்ற பெண்ணை கொச்சி விமானநிலையத்தில் வைத்து பிடித்து மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் மதுமிதா. 32 வயதான இவர் தன் உடன் படித்தவர்கள் மற்றும் தனக்கு அறிமுகமானவர்களை தொடர்பு கொண்டு ஆன்லைன் டிரேடிங் மூலம் தான் புதிதாக தொழில் துவங்கியுள்ளதாகவும், அதில் முதலீடு செய்தால் மாதம் தோறும் முதலீட்டிற்கான லாபத் தொகையை தருவதாகவும் கூறியுள்ளார்.

அவரது பேச்சை நம்பிய பலரும் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடாக செலுத்தியுள்ளனர். ஒவ்வொருவருக்கும் முதல் மாதம் மட்டும் லாபத்தொகை என்ற பெயரில் சிறிதளவு பணத்தை கொடுத்த அந்த பெண் பின்னர் முதலீடு செய்த நிறுவனத்தில் தான் இழப்பை சந்தித்ததாகவும், செலுத்திய பணத்தை விரைவில் தருவதாகவும் கூறியபடியே கோவையிலிருந்து திடீரென தலைமறைவாகியுள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மதுமிதாவை பாதிக்கப்பட்டவர்கள் தேடி வந்த நிலையில் அவர் துபாயில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இதேபோன்று துபாயிலும் மோசடியில் ஈடுபட்டதால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க இருப்பது தெரியவந்தவுடன் துபாயிலிருந்து விமான மூலம் கேரளாவிற்கு வந்துள்ளார். அவர் கேரளாவிற்கு வரும் தகவல் தெரிந்த துபாயில் வசிக்கும் சிலர் ஏற்கனவே தமிழகம் மற்றும் கேரளாவில் மதுமிதாவால் பாதிக்கப்பட்ட சிலருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அந்த தகவலின் அடிப்படையில் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை விமான நிலையத்திற்கு அனுப்பிய பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து மதுமிதாவிற்கு உதவுவதாக கூறி அவரை காரில் ஏற்றி கோவைக்கு அழைத்து வந்துள்ளனர். தொடர்ந்து நேற்று இரவு பாதிக்கப்பட்ட சுமார் 20 பேர் மதுமிதாவை கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக சென்றுள்ளனர். ஆனால் காவல் நிலையத்தில் இந்த வழக்கை எடுத்துக் கொள்ள இயலாது நாளை காலை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளிக்குமாறு உறவே விடிய விடிய அப்பெண்ணுடன் ஐந்து கார்களில் வந்த பாதிக்கப்பட்டவர்கள், காவல்நிலைய வளாகத்திலேயே இருந்துள்ளனர்.



இதனிடையே காரில் இருந்து அதிகாலையில் திடீரென தப்பிய மதுமிதா சாலையில் இறங்கி மீண்டும் அவரை விரட்டிப் பிடித்த பாதிக்கப்பட்டவர்கள், அப்பெண்ணை காரில் வைத்து கோவை பந்தய சாலை பகுதியிலேயே வட்டம் அடித்து வந்துள்ளனர். தொடர்ந்து அப்பெண்ணை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் மோசடியில் ஈடுபட்ட அப்பெண்ணை ஒப்படைத்தனர்.

வென்சுரா என்ற ஆன்லைன் தளத்தில் தான் முதலீடு செய்து தொழில் துவங்கியதாகவும், சுமார் 20 பேரிடம் இரண்டு கோடி ரூபாய் வரை பணம் பெற்று தொழில் இழப்பு ஏற்பட்டதால் துபாய் சென்றதாகவும், பொதுமக்களிடம் வசூலித்த பணம் துபாயில் சென்று முதலீடு செய்து முழுமையாக பணத்தை இழந்து விட்டதாகவும், அதனால் தற்போது திரும்பி வந்துள்ளதாகவும் கூறிய மதுமிதா பணத்தை தற்போது திருப்பி தர இயலாது எனவும், அதற்கான கால அவகாசம் கேட்க இருப்பதாகவும் கூறினார்.



அதே வேளையில் ஒரு லட்சம் தூபாய்க்கு இருபதாயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் தாங்கள் முதலீடு செய்ததாகவும், துவக்கத்தில் பணம் தந்த மதுமிதா, பின்னர் பணம் தராமல் இழுத்தடித்ததாகவும் கூறிய பாதிக்கப்பட்டவர்கள், பணம் கேட்டு நெருக்கடி தந்த போது தலைமறைவாகியதாகவும் தெரிவித்தனர். மேலும் மோசடியில் ஈடுபட்ட மதுமிதாவை தாங்களாவே பிடித்து பந்தையசாலை காவல் நிலையத்தில் நேற்று இரவே ஒப்படைக்க சென்றும், காவல்துறையினர் விடியவிடிய தங்களை அலைக்கழித்ததாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட மதுமிதாவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...