சங்கமேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி மற்றும் பைரவாஷ்டமி முன்னிட்டு விசேஷ பூஜைகள்

கோவையில் சங்கமேஸ்வரர் கோவிலில் மே 1, 2024 அன்று குரு பெயர்ச்சி மற்றும் பைரவாஷ்டமி நிகழ்வுகளுக்காக சிறப்பு பூஜைகளும் யாகங்களும் நடைபெற்றன.


கோவை: கோவை மாநகரின் கோட்டைமேடு பகுதியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் மே 1, 2024 அன்று குரு பெயர்ச்சி மற்றும் பைரவாஷ்டமி நிகழ்வுகளை முன்னிட்டு விசேஷமான பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்றன. பூஜைகள் தொடங்கும் முன்னர், திருக்கோயில் அறங்காவலர்கள் மற்றும் செயல்அலுவலர் பிரபாகர் ஆகியோர் குருப்பெயர்ச்சி பரிகார ஹோமமும், அருள்மிகு தட்சிணாமூர்த்தி மற்றும் நவகிரக குருபகவானுக்கு மகா பரிகார அபிஷேகமும் நடத்தினர்.



பூஜைகளின் போது பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை தரிசித்து அருள் பெற்றனர். அதன் பின்னர், பைரவாஷ்டமி நிகழ்ச்சியில் காலபைரவருக்கு மஹா அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...