கணபதிபாளையத்தில் உள்ள கல்குவாரியில் வெடிப்பொருட்கள் பதுக்கல் – இரண்டு பேர் கைது

ல்குவாரியில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 950 எலக்ட்ரிக் டெனட்டர்கள், 350 ஜெலடின் குச்சிகள் உள்ளிட்ட 1300 வெடி பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் தளபதி மற்றும் ராமசாமி என்ற இருவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் கல் குவாரியில் இயங்கி வருகிறது. இதில் சில கல் குவாரிகள் அனுமதி இன்றி செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து இப்பகுதியில் இருந்து உரிய அனுமதி இல்லாமல் கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் கல்குவாரிகளில் ஜெலட்டின் மற்று எலக்ட்ரிக் டெனரேட்டர் போன்ற வெடி பொருட்களைக் கொண்டு கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது.



இந்தநிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியில் உரிய அனுமதியின்றி வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ஆனைமலை போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து அங்கு விரைந்த போலீசார் சோதனையிட்ட போது தளபதி (70) என்பவருக்கு சொந்தமான கல்குவாரி தோட்டத்தில் ஜெலடின் குச்சிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அங்கிருந்த 950 எலக்ட்ரிக் டெனட்டர்கள், 350 ஜெலடின் குச்சிகள் உள்ளிட்ட 1300 வெடி பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் தளபதி மற்றும் ராமசாமி என்ற இருவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...