கஞ்சா வழக்கு விசாரணைக்காக கோவை சிறையில் இருந்து சவுக்கு சங்கரை மதுரை அழைத்து சென்ற தேனி போலீசார்

கஞ்சா வழக்கு தொடர்பாக மதுரையில் உள்ள போதைப் பொருள் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக தேனி போலீசார், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சவுக்கு சங்கரை இன்று காலை போலீஸ் வேனில் அழைத்து சென்றனர்.


கோவை: யூடியூப்பர் சவுக்கு சங்கர். இவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாகவும், மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 4-ம் தேதி சவுக்கு சங்கரை தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து கோவை அழைத்து வந்து மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீது தேனி போலீசார் கஞ்சா வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து தேனி போலீசார் நேற்று (07-05-2024) அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை மதுரையில் உள்ள போதைப் பொருள் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக தேனி போலீசார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சவுக்கு சங்கரை இன்று (08-05-2024) காலை போலீஸ் வேனில் அழைத்து சென்றனர்.

ஏற்கனவே அவர் தேனியில் இருந்து கைது செய்யப்பட்டு கோவை அழைத்து வந்தபோது திருப்பூர் அருக விபத்தில் சிக்கினார். எனவே இந்த முறை விபத்தில் வேன் சிக்காத வகையில் பலமுறை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு போலீஸ் வாகனம் சவுக்கு சங்கரை மதுரை அழைத்து சென்றது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...