கோவையில் பருவமழையை எதிர்பார்க்காமல் வந்த பெலிகன் பறவைகள்!

தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுதோறும் பருவ மழைக்காலங்களில் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் இந்திய நாட்டிலுள்ள பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி வாயன், கூழைக்கடா, நத்தைக் குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற பல்வேறு வகையான பறவைகள் தமிழகத்திற்கு வருகின்றன.



இவை தவிர, வெளிநாடுகளிலிருந்து பல்வேறு வகையான பறவைகள் தமிழ்நாட்டின் பறவைகள் சரணாலயத்திற்கு வந்து செல்கின்றன. குறிப்பாக, ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் இருந்து பெலிகன் பறவைகள் பெருமளவில் இங்கு வருகின்றன. இங்கு வரும் பறவைகள் நான்கு மாத காலம் வரை தங்கியிருப்பதுடன் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்து அவற்றுடன் திரும்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

அதில் குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் இருந்து வரும் பறவைகளில் அதிக எடை கொண்ட பெலிகன் பறவைகளே அதிகம். கோவைப் பகுதியில் உள்ள சிங்காநல்லூர் குளம், பேரூர் குளம், முத்தணன் குளம், குறிச்சிக் குளம், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் ஆகிய குளங்களைத் தேடி பெலிகன், ஸ்பூன் பில், நாதன்சாளர், டார்டர், பெயிண்டட் ஸ்டார்க், பென்டைல் டக் உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகள் உணவுக்காகவும், இனப்பெருக்கத்துக்காகவும் இடம் பெயர்ந்து இங்கு வருவது வழக்கமாக கொண்டுள்ளது. 



இந்நிலையில், தமிழ்நாட்டில் சென்ற வருடம் பருவ மழை சரியாக பெய்யாததால் கோவையில் உள்ள பல்வேறு குளங்களில் நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து ஆண்டுதோறும் வரும் பெலிகன் பறவைகள் வழக்கம் போல் இந்த ஆண்டும் வந்துள்ளது.

கோவையில் உள்ள குளங்களுக்கு அதிக எண்ணிக்கையில் வந்துள்ள பெலிகன் பறவைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.



Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...