உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலம் ஜூன் மாதம் திறக்கப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நம்பிக்கை

உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் பணிகள் முடிந்து அடுத்த மாதம் (ஜூன்) திறக்கப்படும் என மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை போக்குவரத்து நெரிசலை குறைக்க உக்கடம் மேம்பாலம் திட்டம் அறிவிக்கப்பட்டு 2018-ம் ஆண்டு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக உக்கடத்தில் இருந்து கரும்புகடை வரை இணைப்பு இருந்தது. மேம்பாலம் திட்டத்தை நீட்டிக்க முன்மொழியப்பட்டதை அடுத்து, பொள்ளாச்சி, பாலக்காடு சாலைகளுடன் இணைக்கப்பட்டு கரும்புக்கடையிலிருந்து ஆத்துப்பாலம் வரை நீட்டிக்கப்பட்டது.

உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலத்தின் 92% பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், ஜூன் மாத இறுதிக்குள் சோதனை ஓட்டத்திற்காக மேம்பாலம் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படும் என்றும் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நிலையில் சாலைகளில் ஏற்கனவே விரிசல் காணப்பட்ட நிலையில், சேலம் கோட்டத்தைச் சேர்ந்த மாநில நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் அண்மையில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தனர்.

அவர்கள் வருகையின் போது ஆத்துப்பாலத்தை செல்வபுரம் புறவழிச்சாலையுடன் இணைக்கும் சாலையின் சில பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கோயம்புத்தூர் கோட்ட கண்காணிப்பு பொறியாளர் மற்றும் அவரது குழுவினரால் இப்பிரச்னையை சரி செய்ய ஒப்பந்ததாரருக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ஆய்வு குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் பணிகள் முடிந்து அடுத்த மாதம் (ஜூன்) திறக்கப்படும் என மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...